Sunday, August 24, 2014

மக்கள் உள்ளம் கவர்ந்த கள்வன்

பாரதரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்



  • இலங்கையில் உள்ள கண்டியில் 1917ஆம் ஆண்டு                                                  சனவரித் திங்கள் 17ஆம் நாள் பிறந்தார்.
  • பெற்றோர் = கோபாலமேனன், சத்தியபாமா.
  • வறுமையின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணம் 
  • நகருக்கு குடிபெயர்ந்தனர்.
  • அங்கு ஆணையடிப் பள்ளியில் படித்தார். வருமையின்                                   காரணமாக படிப்பை தொடரமுடியவில்லை.
  • நாடகங்களில் நடித்து, திரைப்படத்துறையில் ஈடுபட்டுச் சிறுசிறு பாத்திரங்களில் நடித்துக் கதாநாயகனாக உயர்ந்தார்.
  • அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல் இவரை மிகவும் கவர்ந்தது.
  • நடிப்பையும், அரசியலையும் தம் இரு கண்களாக கருதினார்.
  • மக்கள் அவரை, “புரட்சி நடிகர்” என்றும், “மக்கள் திலகம்” என்றும் போற்றினர்.
  • அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்தவராக எம்.ஜி.ஆர். விளங்கியதனால், அவரை அறிஞர் அண்ணா, “இதயக்கனி” என்று போற்றினார்.
  • இவர் 1963ஆம் ஆண்டு, சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
  • 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • 1972ஆம் ஆண்டில், தாமிருந்த இயக்கத்தில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கினார்.
  • அவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்று முதல்வராகப் பதவி ஏற்றார்.
  • 11 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.
  • சென்னை பல்கலைக்கழகம் அவரது பணிகளைப் பாராட்டி, டாக்டர் பட்டம் வழங்கியது.
  • இந்திய அரசு, சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் வழங்கியது.
  • மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு வழங்கும் திட்டம் ஆக மாற்றினார்.
  • 24.12.1987 ஆன்று இயற்கை எய்தினார்.
  • 1988ஆம் ஆண்டு இந்திய அரசு அவரின் மறைவுக்குப் பின் பாரதரத்னா விருது(இந்திய மாமணி) வழங்கியது.
*****************************************************************************************

No comments:

Post a Comment